கும்பகோணம், மே. 07 –

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பிச்சைக் கட்டளை புது தெரு பகுதியை சேர்ந்தவர் சற்குணம் என்பவரது மகன் மணிகண்டன் வயது 35 இவர் வீடியோ போட்டோகிராபரயாக உள்ளார்.

இவரது தந்தை உடல்நலக் குறைவால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், நேற்று தனது தந்தையின் கருமாதி  விருந்தில்  நண்பர்களுடன் சேர்ந்து அதிகமாக மது அருந்தி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவிலும் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வெட்ட வெளியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் தலை சிதறி பலியானார்.

தகவலறிந்து கும்பகோணம் ரயில்வே காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்து பத்து நாளைக்குள் மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here