திருவாரூர், மார்ச். 11 –
திருவாரூர் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மேலும் அதே பகுதியில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேசதமிழார்வன் என்பவரை கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ராஜ்குமார் கைதானர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதாகி வெளியே வந்த அவர், இக்கொலை வழக்கு தொடர்பாக நேற்று திருவாரூர் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், அவ்வழியில் உள்ள கமலாபுரம் கடைத்தெரு அருகே அவரது கார் வந்துக்கொண்டிருக்கும் போது, எதிரே காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமார் காரை மோதி இடித்து ராஜ்குமாரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் எஸ்பி சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை மற்றும் தடயங்கள் சேகரிப்பு போன்ற பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும், அவரோடு காரில் வந்த மற்ற 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இக்கொலைச் சம்பவத்தை கண்டித்து ராஜ்குமார் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.