செங்கல்பட்டு, மே. 15 –

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், எப்போதும் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக உள்ள மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே மறைமலைநகர் நகருக்கு செல்லும் சாலையில் ஏராளமான தனியார் தொழிற்சாலை பேருந்துகள் அச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

அதனால் காலை நடைபயிற்ச்சி மேற்கொள்பவர்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அபேருந்துகளை மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இல்லாத முறையான பார்க்கிங்க் வசதி உள்ள இடத்தில் நிறுத்திடும் படி அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்போக்கு வரத்து நெரிசல் உள்ள பகுதியில் நிறுத்துவதால் சாலை விபத்து ஏற்படும் நிலை உள்ளதென அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக போக்கு வரத்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here