கும்பகோணம், மே. 12 –

கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அருகிலுள்ள மாத்தி கேட்டு பகுதியில் உள்ள தருமகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார்  பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இவர் இதே பகுதியில் உள்ள அண்ணலக்ரகாரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த  முத்துசாமி என்பவரின் மகன் தங்கமணி வயது 62 என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மர்மமான முறையில் இறந்துபோன தங்கமணி அப்பகுதியில் உள்ள சில்வர் பட்டறையில் 30 ஆண்டுகளாக பாலிஷ் போடும் தொழில் செய்து வந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. மேலும், இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இவருக்கு மனநிலை பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது

இந்நிலையில் தங்கமணி கடந்த சனிக்கிழமை முதல் காணாது போனதால் இவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, அதன் தொடர்ச்சியாக இன்று காலை தரும குளத்தில் சடலமாகக் கிடந்த வரை தங்கமணியின் மகன் சரவணன் அடையாளம் கண்டு தனது தந்தை என்று காவல் துறையிடம் தெரிவித்ததன் பேரில்,

பிரேதத்தை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தவுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here