விருதுநகர், மே. 30 –
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 25 ஆம் தேதியன்று திறந்து வைத்தார்.
பின்பு அத்தலைவர்களின் திருவுவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அவ்விழாவில் கலந்துக்கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களோடு சேர்ந்து அப்புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு, அத்தலைவர்கள் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அவர்கள் ஆற்றிய தியாகங்கள் பற்றி மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.