மதுரவாயல், ஏப். 13 –

மதுரவாயலில் விளம்பரப்பலகை மாட்ட முயன்ற போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலியானார் அவருடன் இருந்த மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர்  தினேஷ் என்ற அப்பு (37)  இவர்  தனியார் நிறுவனத்தில் சரக்கு வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று தனது நிறுவனத்தின் விளம்பர போர்டுகளை மதுரவாயல் ஆண்டாள் அழகர் நகர் பிரதான சாலையில் உள்ள கடைகளுக்கு ஏற்றிக்கொண்டு சென்றார்.

விளம்பர போர்டை ஒரு கடையின் மாடியில் மாட்டுவதற்காக தூக்கி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக  மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த  கம்பியில் போட்டு சாய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி திணேஷ் முதல் தளத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடன் சென்ற ஜெயச்சந்திரன் என்பவர் மின்சாரம் தாக்கியதில் காயங்களுடன் உயிர் தப்பினார். அவர்  சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here