கும்பகோணம், செப் . 15 –

 

கும்பகோணத்தில்  அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பெரியார் எம்ஜிஆர் நேரு காந்தி உள்ளிட்ட தேசத்தலைவர்கள் வாழ்க்கை வரலாறு மற்றும் இலக்கிய கவிதை உள்ளிட்ட 1300 புத்தகங்கள் காந்தி பூங்கா அருகில் உள்ள அரசு நூலகம் கம்பட்ட விஸ்வநாதர் மேலவீதியில் உள்ள அரசு நூலகத்திற்கும்  வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நகர செயலாளர் தமிழழகன் ஒன்றிய செயலாளர் கணேசன் நகரத் துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் நகர பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மகளிர் அணி பொறுப்பாளர் கவிதா மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து அண்ணாவின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் மற்றும் இலக்கிய புத்தகங்களை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here