கும்பகோணம், பிப். 19 –
கும்பகோணம் மகாமகம் பெருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும், இவ்விழாவினை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
அந்த வரிசையில் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், மகாமக விழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான நாகேஸ்வரன் கீழ வீதியில் அமைந்துள்ள காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, விடிய விடிய மூலவர் ஏகாம்பரேஸ்வரசுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள் பொடி, தேன், பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்