மயிலாடுதுறை, ஜூன். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இன்று புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வக்பு வாரியத்தின் சார்பில் நடைப்பெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு தேர்தல்  வாக்குப்பதிவு முறை மூலம் இன்று நடைபெற்றது.

இதில்  முகமத் அர்ஷத் தலைமையில் 13 நபர்களும் செய்யது அலி தலைமையில் 8 நபர்களும் போட்டியிட்டனர், வஃக்பு வாரிய தேர்தல் அதிகாரி அப்துல்லா முன்னிலையில் வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

அத்தேர்தலில் மொத்த வாக்குகள் 498 இதில் பதிவான வாக்குகள் 281 செல்லாதவை 10 இத்தேர்தலில் 242 வாக்குகள் பெற்ற முகமதுஅர்ஷத் மூத்தவல்லி பதவியை பெற்றார். இதனை அடுத்து ஊர் நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி.

முகமது புகாரி

முன்னாள் முத்தவல்லி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here