திருவாரூர், டிச. 28 –

திருவாரூரில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் EPS- 95 உயர் ஓய்வூதியம், மத்திய அரசிடமிருந்தும் மற்றும் தமிழக அரசிடமிருந்து கருணை ஓய்வூதியம் வழங்க கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினார்கள்.

திருவாரூர் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் EPS பென்சனை உயர்த்தி வழங்கு, ஓய்வூதியர்களுக்கு வாழ்வாதாரம் மேம்பட கருணை தொகையாக ரூபாய் 4000 உடனே வழங்கிடு, ஓய்வூதியர்களை வஞ்சிக்காதே வஞ்சிக்காதே, சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த நிலையிலும் மாத பென்ஷன் 1000 வழங்குவது நியாம்தானா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் அவ்வார்ப்பாட்டத்திற்கு, ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்க, குணசேகரன், காதர்மைதீன், பரமசிவம், மதியழகன், தீபன்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here