திருவாரூர், ஜூன். 16 –

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 34வது  சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்ற மாணவர் சுகேஷ் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றார். மேலும், சர்வதேச சதுரங்க போட்டியை காண தேர்வு செய்யபட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஆப்பாவூர் கிராமத்தை சேர்ந்த உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலளாரும் விவசாயியுமான பழனி என்பவரின் மகன்  சுகேஷ்க்கு பாமக கட்சி சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். மேலும் அம் மாணவனுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையையும் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

அதனை, பாட்டாளி மக்கள் கட்சியின்  முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான வேணு. பாஸ்கரன்  மாணவன் சுகேஷை நேரில் சந்தித்து ரூபாய் 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி  சால்வை அணிவித்து பாராட்டும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உலகநாதன், உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் பழனி , மாநில இளைஞரணி செயலாளர் சண்முகம் , மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்ற மாணவனுக்கு இனிப்பு மற்றும் மாங்கனி வழங்கி சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பேட்டி: வேணு.பாஸ்கரன் (பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தற்போது மாநில செயற்குழு உறுப்பினர்)

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here