சென்னை, ஏப். 21 –

கோடைகாலத்தில்  மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பயன்படும் வகையில், சமூக ஆர்வலரும், நடிகருமான கருத்து காமராஜ் ஏற்பாட்டில் வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.

அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாரக பங்கேற்ற வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குருஸ், மக்கள் பயன்பாட்டிற்காக  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு முதல்நாளான இன்று பழரச குளிர்பானம், மற்றும் நீர்மோரினை வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சக காவலர்கள் மற்றும் மதுரவாயல் வீரா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் ஏராளமான ஏழை எளிய பொதுமக்கள்  மோர், ஜீஸ், பழ ரசங்கள், பழங்களை வாங்கி அருந்தி பயனடைந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here