மணலி, ஏப். 02 –

மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை  பெருமாள் கோவில் தெரு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உயர் மற்றும் தாழ்வு சீர் மின்னழுத்தம் மற்றும் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து இதே பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளுக்கு தடையில்லா மின் சப்ளை கிடைக்க திட்டமிட்டு புதிய மின்கம்பம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு நடப்பட்டது. ஆனால் டிரான்ஸ் பார்மரில் இருந்து மின் கம்பம் வழியாக மின் வயர் இழுக்க படாமல் உள்ளது.

இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து டிரான்ஸ்பார்மர் அமைத்தும் அதனுடைய முழு பயனை பொதுமக்கள் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது. ஏனிந்த காலதாமதம் அதனை உடனடியாக சரிசெய்து இப்பகுதி பெருமாள் கோவில் தெருவில் உள்ள சுமார் 100 வீடுகளுக்கு புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் சப்ளை செய்யும் வகையில் மணலிபுதுநகர் மின் நிலையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மணலி மண்டல மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here