திருவிடைமருதூர், பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் கடன் பிரச்சினையால் தாய், மகள் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்தேறியது.

திருவிடைமருதூர் தாலுகா மகாதான வீதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி ரேவதி தனியார் குழுவில் கடன் அதிகமாக வாங்கியதாக கூறப்படுகிறது. அதனால் அக்கடனை அவரால் திருப்பி கட்ட முடியவில்லை எனவும், அதனால் மனமுடைந்த ரேவதி மற்றும் அவருடைய மனவளர்ச்சிக் குன்றிய மகள் மகேஸ்வரி ஆகிய  இருவரும் திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, மாலை 6.30 மணி அளவில் அங்கு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அத் தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் ரயில்வே காவல்துறையினர், மற்றும் திருவிடைமருதூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்விற்காக அவர்கள் இருவரின் உடலையும் அனுப்பி வைத்தனர். மேலும் அச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் பிரச்சினையால் தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி வாழ் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here