கும்பகோணம், டிச. 7 –

கும்பகோணத்தில் 50 சதவீத பட்டு நூல் விலை உயர்வை குறைக்க கோரியும், கைத்தறி பட்டு துணி ரகங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக உயர்த்த உத்தேசிக்க இருப்பதில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரியும், தஞ்சை, திருவாரூர், மற்றும் அரியலூர் மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திற்கு முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கும்பகோணத்தில் தமிழகத்தின் பாரம்பரியமான பட்டு கைத்தறி சேலைகள் தயாரிக்கப்படும் ஒரு சில இடங்களில் தஞ்சை, திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இத்தொழிலை நம்பி இருபத்தி ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.

இதுவரை பட்டு நூல் கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த நிலையில், தற்போது இதன் விலை 2000 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரம் ரூபாயாக 50 சதவீதம் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை கைத்தறி பட்டு ரகங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனை மத்திய நிதி அமைச்சகம் 12 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

GST வரியிலிருந்து காதி துணி ரகங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது போல், கைத்தறி பட்டு ரகங்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும், பட்டு நூல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று தலைமை தபால் நிலையம் முன்பு 200க்கு மேற்பட்ட கைத்தறி தஞ்சை திருவாரூர் அரியலூர் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மட்டும் ஆண்டு ஆண்டொன்றுக்கு சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு கைத்தறி பட்டு சேலைகள் விற்கப்பட்டு வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

 

பேட்டி:  1) நாகேந்திரன்.

கைத்தறி நெசவாளர் திருபுவனம்.

 

2) ராயா கோவிந்தராஜன்

கைத்தறி நெசவாளர்.

கும்பகோணம் :

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here