மீஞ்சூர், மே. 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் முன்னதாக பக்தவச்சலம் தெருவில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலத்தை மீஞ்சூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண்கள் பேரணியாக வளம் வந்து சிவன் கோயிலை வந்தடைந்தது. அதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் உடை அணிந்து விரதம் இருந்து இந்த பால்குடத்தை தலையில் சுமந்தபடி அரோகரா அரோகரா என்ற கோஷங்களுடன் சிவன் கோவிலில் உள்ள ஆறுமுக சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here