திருநின்றவூர், ஏப். 13 –

ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

பாஜகவின் ஸ்தாபகர் மண்டலில் தினம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற இம்மருத்துவ முகாமில் சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள்  மற்றும் செவிலியர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சையளித்தனர்.

மேலும், இந்த முகாமிற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகிக்க சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக எஸ்சி அணி மாநில தலைவர் பொன் பாலகணபதி, மற்றும் ஓபிசி அணி மாநிலத்தலைவர் எல்.லோகநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.

இம்மருத்துவ முகாமில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு கண் பரிசோதனை, பல் பரிசோதனை, பிசியோதெரபி, தோல் சம்பந்தமான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் இருநூறுக்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினார்கள்.

மாவட்ட பொது செயலாளர் ஆர்.வி சந்தோஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அமர்நாத் ஆகியோர் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும்  இந்நிகழ்ச்சியில் ஜெயக்குமார், சந்தோஷ், தினேஷ்குமார், பாண்டியன், உள்ளிட்ட பாஜக  பட்டியலின அணியைச் சார்ந்த திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here