திருவண்ணாமலை, அக். 23 –

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படுயிருந்தது. அதன் படி குலுக்கலில் முதல் பரிசை வென்ற சு.பொலக்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுசீலாவிற்கு சைக்கிளை பரிசாக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். அருகில் ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஆணையாளர் ஜி.பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆ.சம்பத், ஒன்றியக்குழு உறுப்பினர் அனுராதா சுகுமார் ஆகியோர் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here