வேலூர் பாராளு மன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட மனு தள்ளுபடி

சென்னை:

 

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து அத் தொகுதியில் போட்டி யிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

 

ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டு மொத்தமாக தேர்தலை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்தி வைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக் கூடாது என்றால் பணப்பட்டு வாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். 

 

பணப் பட்டு வாடா விவகாரத்தில் சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும்? தேர்வு செய்யப் பட்ட வேட்பாளரைத் தான் தகுதி நீக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மட்டுமே மக்கள் பிரதித்துவ சட்டப்படி தகுதி நீக்கம்  செய்ய முடியும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.

 

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது: வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது. நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரை செய்யப் பட்டது.

 

தேர்தல் நடத்து வதற்கான சூழல் இல்லாததால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து. தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித் துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

 

பறிமுதல் செய்யப்பட்ட பணம், வழங்கப் படாதவர்களுக்கு வழங்க வைக்கப் பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. வருமான வரித்துறை அறிக்கையில் ஏற்கனவே பணப்பட்டு வாடா நடந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளது.

 

ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறை கேடுகளில் ஈடு படுவது குற்றம். வேலூர் வழக்கில் சம்பந்தப் பட்டவர் தண்டிக்கப் பட்டால் தகுதி நீக்கம் செய்யப் படுவார் என வாதம் செய்தது.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர். மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறினர்.

 

இந் நிலையில், மாலையில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here