கும்பகோணம், டிச. 25 –

கும்பகோணத்தில் உள்ள குடந்தை சிட்டி லைன் சங்கத்தின்  25 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டம் நேற்று நடைப்பெற்றது. அவ்விழாவில் பல்வேறு  நலத்திட்ட உதவிகளை விவசாயிகள், பெண்கள் எனபல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டது.

கும்பகோணத்தில் குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு நாளையொட்டி ராயா மஹாலில் லயன்ஸ் சங்க தலைவர் காளிதாஸ் தலைமையில் விழா நடைபெற்றது.

25ம் ஆண்டை முன்னிட்டு கேக் வெட்டி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்நிகழ்ச்சியில் 25 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர் அறுவாள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பெண்களுக்கு தையல் இயந்திரம் சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைவர் சிவராமன் மாவட்ட ஆளுநர் ராஜரத்தினம் இயக்குனர் தனபாலன் கருணாநிதி மதனகோபால் ஜெயின் சந்து ஜெயின் சேது குமார் சேது சுப்ரமணியன் இமயவர்மன் சமுத்திரம் கணேஷ் குப்புசாமி சதீஷ் கலைச்செல்வி சுவாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here