செய்தி சேகரிப்பு இரமேஷ்

கும்பகோணம் ஆணைக்காரன் பாளையத்தில், பயன்பாட்டில் இல்லாத ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் விஜய் (24) என்ற வாலிபர் சடலமாக கண்டெடுப்பு, அவரது அருகில் போதை மருந்து மற்றும் ஊசியும் சிதறிக்கிடந்ததால், அளவிற்கு அதிகமான போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க கூடும் என போலீசார் சந்தேகம்.

கும்பகோணம், செப் . 4 –

கும்பகோணம் ஆனைக்காரன் பாளையம் அருகே  பயனற்ற ரயில்வே ஊழியர் குடியிருப்பில் இன்று ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், சுமார் 24 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில், சடலமாக கிடந்த  நபர் அதே பகுதியை சேர்ந்த விஜய் (24) என்றும், இவர் மேற்கு காவல் நிலைய குற்றப்பட்டியலில் இடம் பெற்றவர் என்றும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.

    இவரது உடல் அருகே போதை மருந்து பாட்டிலும், ஊசியும் கிடந்ததால், இவர் அளவுக்கு அதிகமான போதை ஊசியை செலுத்திக் கொண்டதால் உயிரிழந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து கும்பகோணம் மேற்கு போலீசார், விஜய்யின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here