கும்பகோணம், மே. 02 –

கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் உள்ள மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி எதிரே உள்ள மகளிர் விடுதியில் கோட்டாட்சியர் லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சில மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட இருப்பு பதிவேடுகளை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது விடுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். விடுதி கட்டடங்களை முறையாக பராமரிக்க வேண்டும், அடிப்படை வசதிகளில் குறைகள் இருக்க கூடாது என அறிவுறுத்தினார். தொடர்ந்து விடுதியில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அரிசி மளிகைப்பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சமையல் கூடத்தை ஆய்வு செய்த கோட்டாட்சியர், அங்கு தயார் செய்து கொண்டிருந்த மதிய உணவை ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு அங்கிருந்த ஊழியர்களிடம் விடுதியை தொடர்ந்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here