கும்பகோணம், அக். 10 –

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்று விளங்குபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் பாகம் – 1  என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத் திரைப்படம் கடந்தமாதம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த படங்களின் வரிசையில் 4 வது இடத்தை இத்திரைப்படம் பிடித்து சாதனைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி கும்பகோணம் பரணிகா திரையரங்கத்தில் மதியம் நடந்த காட்சியில் இன்னர் வீல் கிளப் சார்பில் நந்தினி, குந்தவை பழுவேட்டரையர்,  அருள்மொழிவர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் போல் வேடமடைந்து திரையரங்கத்திற்கு வந்ததால் திரையரங்கத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து இத்திரைப்படத்தை காண வந்த ரசிகைகள் கதாபாத்திர வேடமணிந்து வந்தவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here