கும்பகோணம், ஜூன். 15 –

கும்பகோணம் அருகாமையில் உள்ள அசூர் கிராமத்தில் சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்யும் நிறுவனத்தின் கன்வேயர் பெல்ட்டில் அடிப்பட்டு வட மாநில கூலித்தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமர்பூர் தோகார் பகுதியைச் சேர்ந்த பிரிஜு (31,) கடந்த ஒரு ஆண்டாக கும்பகோணம் அருகாமையில் உள்ள அசூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சிமென்ட் கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சிமெண்ட் கான்கிரீட் கலவை செய்வதற்காக பிரிஜு  வேலை பார்க்கும் போது கலவை இயந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் அடி பட்டார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே 31 வயதான பிரிஜு  உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சுவாமிமலை காவல் நிலையத்திற்கு புகார் வரவே, சம்பவ இடத்திற்குச் விரைந்துச் சென்ற போலீசார் பிரிஜு புஜ்காரின்  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இவ்விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here