கும்பகோணம், டிச. 11 –

கும்பகோணம் அருகே பாபநாசம் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம். மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவர் சிவக்குமார் தலைமையில்  நடைபெற்றது.

இதில் காசோலை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், பெண்கள்  வன்கொடுமை தடுப்பு சட்டங்கள், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நில தகராறு வழக்குகள் உள்ளிட்ட 40 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையில் 25 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 10 லட்சத்து 86 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டது. முகாமில் நீதிமன்ற ஊழியர்கள்,  வழக்கறிஞர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்டப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here