காஞ்சிபுரம், மே. 14 –

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 2ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி பாலித்தார் வரதராஜ பெருமாள் அவரைக் காண வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

2ம் நாள் காலை உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், போர்வாள் கேடயம் அணிந்து மல்லிகை பூ, மனோரஞ்சிதம் பூமலர் மாலைகள் சூட்டி வெள்ளி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பாலித்தபடி பாதம் தாங்கிகள் தூக்கி வர காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார்.

வழி நெடுகிலும் வீதிகளில் பெரும் திரளான பக்தர்கள் கூடி நின்று வெள்ளி ஹம்ச வாகனத்தில் வலம் வந்த வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்து வணங்கிச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here