காஞ்சிபுரத்தில் குளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட  தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

காஞ்சிபுரம் , செப் . 18 –

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஒ.பி குளம் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஒக்க பிறந்தான் குளம். இக்குளத்தில் இன்று பிற்பகல் நாய் ஒன்று தவறி விழுந்து நீண்ட நேரம் தத்தளித்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தின் நடுவே தத்தளித்து கொண்டிருந்த நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

குளத்து நீரில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை பத்திரமாக மீட்ட காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here