காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் கல்வித்துறையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

காஞ்சிபுரம், செப். 6 –

செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட  9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது

சுந்தைவேலூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் ராஜ்குமார், மாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் யுவராணி உள்ளிட்ட 9 பேருக்கு ஆட்சியர் ஆர்த்தி சால்வை அணிவித்து ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கி பாராட்டினர்.

 

இந்த விழாவில் பேசிய காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, தங்கள் குழந்தைகளை பத்திரமாக பாரத்துக் கொள்வதாலும் நல்ல ஒழுகங்களை கற்று தருவதாலும் நாம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றோம் தமிழகத்தில் கல்வியில் சிறந்த மாவட்டமாக முதல் இடத்தை நம் மாவட்டம்  பிடிக்க வேண்டும் அதற்க்கு  மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here