இராசிபுரம், மார்ச். 28 –
இராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முதியோர் இல்லத்திற்கு மளிகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கிக் கொண்டாடினார்கள்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கிழக்கு மாவட்ட திமுக., பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு மதியம் பட்டியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு மளிகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, வெண்ணந்தூர் ஒன்றிய கழக பொறுப்பாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான RM.துரைசாமி அவர்கள் தலைமை வகித்து மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கினார்.
மேலும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் AR.துரைசாமி, வெண்ணந்தூர் பேரூர் கழக பொறுப்பாளரும், பேரூராட்சி தலைவருமான RSS.ராஜேஷ் மற்றும் சத்தியமூர்த்தி, விஜயபாஸ்கர், மதியம்பட்டி மோகன், நடேசன், பாலசுப்பிரமணியன், சீனிவாசன், சேகர், அன்பு டிஜிட்டல் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி ரவீந்தர், அருண்குமார், சபரி யோகேஷ்வரன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.