கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ். இவர் 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இன்சமாம்-உல்-ஹக்கை ரன்அவுட்டாக்கியதை யாரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.

இவர் கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்களை தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னாவிற்கு இடம் கொடுத்துள்ளார்.

ஐந்து பேர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா உடன் ஏபி டி வில்லியர்ஸ், கிப்ஸ், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சைமண்ட்ஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here