டெஹ்ரான்:
ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் – கோம் நெடுஞ்சாலை வழியாக இன்று சுமார் 50 பயணிகளுடன் வந்த ஒரு பஸ், கெர்மான் நகரின் மத்திய பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.