இராசிபுரம், ஏப். 04 –
ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வயிற்றில் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம், அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வயிற்றில் துணிகட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர்.