மீஞ்சூர், ஜூலை. 14 –

தமிழ்நாட்டில் மிகப்பிரலமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும், வசந்த் & கோ எனும் நிறுவனம் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் வீதியில் தனது 112 வது விற்பனைக்கூடத்தை திறந்துள்ளது.

மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வி அவ்விற்பனைக் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அன் கோ நிறுவனருமான விஜய்வசந்த், மற்றும் ஜெகநாத், தங்க மலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்ந்து அவர்கள் மூவரும் கடையில் உள்ள பொருட்களை பார்வையிட்டனர். பின்பு, வாடிக்கையாளர்களிடம் எவ்விதத்தில் அணுக வேண்டும். மற்றும் அவர்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் சேவையாற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிக்காட்டல் முறைகளை அக் கிளை ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்கள்.

மேலும் இப்புதிய விற்பனைக்கூடத்திற்கு பல்வேறு பொருட்களை வாங்க திரளான அப்பகுதி மக்கள் வந்திருந்தனர். அவர்கள் பொருட்களை வாங்கியது மட்டுமல்லாமல் அக்கூடத்தில் தாங்கள் குடும்பத்தினருடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

முன்னதாக விற்பனைக்கூட திறப்பு விழாவிற்கு வந்திருந்த வசந்த் & கோ வின் நிர்வாக இயக்குனர் தமிழ்செல்வி வசந்த குமாருக்கு அக்கிளை சார்பில் மலர் கொத்து வழ.ங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் வசந்த் அண்ட் கோ, 112 வது கிளை மேலாளர் விஜய்ராஜ், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், ஐ என்டியுசி மாநில துணைப் பொது செயலாளர் எம்.பி. தாமோதரன், உள்ளிட்டவர்களும்,  திரளான கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here