சென்னை, மே. 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்…

முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா  கோடம்பாக்கத்தில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட  அதிமுக செயலாளர் தி.நகர் B.சத்யா திறந்து வைத்தார்..

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான புரட்சி தமிழர்  எடப்பாடியாரின்  70 வது  பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்டம் கோடம்பாக்கம், யுனைடெட் காலனி பகுதியில் பழரசம் மற்றும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம்  தணிக்கும் வகையில்   தென்சென்னை வடக்கு (மே) மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில்… வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் எஸ். கே. கண்ணதாசன் ஏற்பாட்டில்.. கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி பகுதியில்..

தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட கழக செயலாளர் தி. நகர் B. சத்யா பழரச நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழரசம், நீர்மோர்,  குளிர் பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்..

இந்நிகழ்வில்,  வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்  J.H.இனியன், துணை செயலாளர் S.K. கண்ணதாசன், கலை இலக்கிய பிரிவு மாநில துணை செயலாளர் ரவி மரியா மற்றும் வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜ், ராம் திருவேங்கடம், மாணிக்கவேல் தென்சென்னை வடக்கு (மே) மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திரளான அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here