சோழவரம், ஜன. 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பாலகணபதி 

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் அமைந்துள்ள எம்.கே.எல். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்பு துவக்க விழா அக் கல்லூரியின் வளாகத்தில் தாளாளர் எல் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது, மேலும், துணை முதல்வர் காயத்ரி முன்னிலை வகித்தார். அவ்விழாவற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று கல்லூரியின் முதல்வர் முனைவர் பனிமலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களக திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் பெர்னட் ஆண்டனி ராஜ்,  திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.தாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

கல்லூரியின் இயக்குனர் விஸ்வதீனா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள்,  மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here