தஞ்சாவூர், மார்ச். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை ரயிலடி பகுதியில் இருந்து ஆற்றுப்பாலம் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி  ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டையுடன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, கஞ்சா போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும், கஞ்சா புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டிக்கிறோம்,  நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆச்சு, சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடு, கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு, உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர்,  அமைப்பு செயலாளர் காந்தி, மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என  ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here