காஞ்சிபுரம், மே. 13 –
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பஜாரில் வாய்பேச முடியாத 8 வயது சிறுமி ஒருவர் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக சுங்குவார்சத்திரம் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இதுக் குறித்து காஞ்சிபுரம் குழந்தைகள் நல உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அதிகாரிகளும் போலீசாரும் சிறுமியின் பெற்றோர் குறித்து விசாரணை செய்து வந்த நிலையில் காணாமல் போன சிறுமி மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் லோதிகா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது பெற்றோரை காவல் நிலையம் அழைத்து வந்து சிறுமியை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.