கும்பகோணம், ஜூன். 20 –
கும்பகோணம் அருகே மாத்தி ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் ரயில் வரும் நேரங்களில் கேட் முடி திறப்பது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சரக்கு ஏற்றி வந்த ரயில் சென்றது. இதனால் மாத்தி ரயில்வே கேட் மூடப்பட்டது ரயில் சென்றதும் கேட்டைத் திறக்க முயன்ற போது திறக்கவில்லை, இதனால் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்புபவர்கள், இருசக்கர வாகனத்திலும், மாநகர பேருந்திலும் செல்பவர்களை ரயில்வே ஊழியர்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தினர்.
தகவலறிந்த ரயில்வே பணியாளர்கள் மற்றும் நிலைய அலுவலர் அங்கு விரைந்து வந்து ரயில்வே கேட்டை உடனே சரி செய்தார்கள். பழுது நீக்கிய பின் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் 1/2மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.