தஞ்சாவூர், ஏப். 30 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்பு. என்கின்ற ஹரிஹரன் இவர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் பழம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் வியாபாரத்திற்காக பழங்கள் எடுப்பதற்கு

டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் திருச்சியில் நேற்று விடியற்காலை காய்கறி பழங்கள் வாங்கிக் கொண்டு ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ராஜமுருகன், டிரைவர் வினோத் ஆகியோர் நீடாமங்கலம் திரும்பிக் கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் அருகே வல்லம் புற வழிச்சாலையில் அவர்கள் வகனத்தை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தை வழிமறித்து, டிரைவர் வினோத்தை முதுகில் அருவாலால்  வெட்டி உள்ளனர்.

அதனால் நிலை தடுமாறி டிரைவர் டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தியுள்ளார் வலது பக்கம் உட்கார்ந்து இருந்த ஹரிஹரனை தலை கை கால் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஹரிகரன் உயிரிழந்துள்ளார்.

வாகனத்தின் மேல் அமர்ந்திருந்த ராஜமுருகன் அலறியடித்து சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர் இந்த  கொலை குறித்து வல்லம் போலீசார் விசாரணை. செய்து வருகின்றனர். டிரைவர் வினோத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here