கும்பகோணம், மே. 29 –

கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மகளிர் லியோ சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமை சிட்டி யூனியன் வங்கி மேலாண்மை இயக்குநர் பாலசுப்ரமணியம் மற்றும் லயன்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமையில் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் மதுசூதனன் நிர்வாக அலுவலர் ராமதுரை மூத்த உறுப்பினர் காசி பாலசுப்ரமணியன் பரதன் மண்டல தலைவர் சதிஷ் மற்றும் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இம் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 350 மேற்பட்டருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டன. அவர்களை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 5 பேருந்து மூலம் அழைத்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here