ஆவடி, டிச. 30 –

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், ஆவடி அருகே சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் வெள்ளானூர் கிராமம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய கவுன்சிலர் குணாதயாநிதி தலைமையில் வெள்ளானூர் சமூதாயக் கூடத்தில் இன்று நடைபெற்றது.

மேலும், சங்கர நேத்ராலயா மருத்துவமனை  ஏற்பாட்டில் வெள்ளானூர் வேல்முருகன் கலந்து கொண்டார். இந்த இலவச கண் சிகிச்சை முகாமில்   கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நீர், குழந்தைகள் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, மாலைப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சிறப்பு முகாமில் பல்வறு கண்குறைபாடுகள் கொண்ட பயனாளிகள் கலந்துக் கொண்டு. சிகிச்சைப் பெற்றனர். அனைவருக்கும் உடனுக்குடன் கண் பரிசோதனை  செய்யப்பட்டது. இதில் கண்பார்வைக் குறைபாடுகள் கண்டறியப்பட்டவர்களுக்கு மூக்குக் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், இந்த முகாமில் கலந்துக் கொண்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here