ராசிபுரம், மார்ச். 27 –
நாமக்கல் மாவட்டம். ராசிபுரம் நகராட்சியில் புதிதாக மேற் கொள்ளப் படவுள்ள கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ் ரூ. 2.43 கோடி மதிப்பில் தினசரி மார்க்கெட் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்தில் வீட்டு வசதி வாரிய பகுதியில் புதிய பூங்கா, 15-வது நிதிக்குழு 2021-2022 கீழ் ரூ.25 லட்சத்தில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் ஆகிய திட்டங்களுக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் நகரமன்றத் தலைவர் ஆர்.கவிதாசங்கர் , திமுக நகர செயலாளர் என்.ஆர். சங்கர் ,ராசிபுரம் ஒன்றிய தலைவர் கே.பி.ஜெகநாதன் உட்பட வார்டு உறுப்பினர்கள், பிரதிநிதிகள், செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.