இந்திய அணி முன்னாள் பந்து வீச்சாளரும், டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவருமான அமித் பண்டாரி மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார்.

23 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வு செய்யப்படாத அனுஜ் தேதா என்ற வீரர் இந்த தாக்குதல் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு முன்னாள் வீரர் காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, ‘‘அமித் பண்டாரி மீதான தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here