காஞ்சிபுரம், ஆக. 07 –

காஞ்சிபுரம் அருகே பொன்னேரிகரை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முருகன் வழக்கம் போல் இன்று வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்போது எதிர் பாராத விதமாக மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனே காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரியபடுத்தப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறை வீரர்கள் வந்தனர். கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த கட்டிடத்தை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறை தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் மிக்சி, கிரைண்டர், வாஷிங்மிஷின், என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின பணம், தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் முக்கிய ஆவணங்கள் தப்பியது. வழக்கமாக வீட்டில் இரண்டு குழந்தைகளை வீட்டு விட்டு வீட்டை பூட்டிவிட்டு பெற்றோர்கள் செல்வார்கள். ஆனால் குழந்தைகளை ஆடி வெள்ளி கோவில் திருவிழாவிற்காக அழைத்து சென்றுள்ளனர். இதனால் மேலும் இச்சம்பவத்தில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here