பொன்னேரி, ஏப். 04 –

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட 4 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் பகுதியில் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது, மேலும், பொன்னேரி நகர திமுக சார்பில் செயலாளர் ரவிக்குமார், நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையிலும், மீஞ்சூரில் நகர திமுகச்  செயலாளர் தமிழ்உதயன் தலைமையிலும், அத்திப்பட்டு ஊராட்சியில் எம்.டி.ஜி கதிர்வேல் தலைமையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் இந்நிகழ்வில், திமுக தலைமைக் கழக தேர்தல் பொறுப்பாளராக மாநில மாணவரணி துணை செயலாளர் தமிழ் க. அமுதரசன் , திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளர் டிஜே கோவிந்தராஜன், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகச் செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு புதிய திமுக உறுப்பினர்களுக்கான  படிவத்தை வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில், பொன்னேரி மா தீபன், உமாபதி, மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணை தலைவர் அலெக்சாண்டர். கோமதிநாயகம், முருகானந்தம். கோபிநாதன். பரிமளம், பன்னீர்.சாஸ்திரி,ரவி, ஜான்சன், மகிமைதாஸ் வடிவேலு சாம்ராஜ் உள்ளிட்டவர்களும் மேலும் அக்கட்சியை சேர்ந்த  திரளான தொண்டர்களும் கலந்து கொண்டனர், மேலும் இதில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் 60 நபர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here