மீஞ்சூர், மே. 20 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பேரூராட்சியில் அடங்கிய இரண்டாவது வார்டு பகுதி அம்மா செட்டிகுளம் ஆகாய தாமரைகளை அகற்றி விட்டு குளத்தை சீர்படுத்தவும். அரியன்வாயில் பகுதி மக்களுக்கு சமுதாயகூடம் கட்டுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து குடிநீர் விநியோகம் நடைபெறும் பகுதிக்குச் சென்று மோட்டார்களை பார்வையிட்டார். தொடர்ந்து பேரூராட்சியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் மற்றும் சுகாதார பணிகளை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் அவருடன் பேரூராட்சித் தலைவர் ருக்மணிமோகன்ராஜ் .செயல் அலுவலர் வெற்றிஅரசு .துணை தலைவர் அலெக்சாண்டர் .வார்டு உறுப்பினர் அபுபக்கர். வியாபாரிகளின் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஷேக்அகமது. முன்னாள் வார்டு கவுன்சிலர் சித்திக்பாஷா .மாற்றம் அலுவலக பணியாளர்கள் சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன். அலுவலக பணியாளர் மொய்தீன்கான் .உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here