திருவள்ளூர், செப். 12 –

திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த  அருள்மிகு ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் கோவிலில் தீமிமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் காப்பு கட்டி, விரதம் இருந்து, தீமிதித்து தங்களது வேண்டுதலை செலுத்தினர். இவ்விழாவினைக் காண மீஞ்சூர், பழவேற்காடு மற்றும் பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

இவ் விழாவை முன்னிட்டு பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் விழாக் கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்வுகளை குழந்தைகள் முதல் குடு குடு கிழவர்கள் வரை கண்டு மனம் மகிழ்ந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here