தஞ்சாவூர், மே. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி  வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர்.

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997 ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தஞ்சை மறை மாவட்ட ஆயராக 25 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் 76 வயது வரை வாழ்ந்த அவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here