பொன்னேரி, செப். 22 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.

இந்ந ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பெரவல்லூர் சே.ராஜா தலைமையேற்றார். மேலும், பொன்னேரி அண்ணா சிலை அருகே நடைப்பெற்ற இந்த ஆர்பாபட்டத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக முழக்கங்கள் எழுப்பியவாரே பொன்னேரி டாக்டர் அம்பேத்கர் சிலையை சென்றடைந்தது. இந்நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில நிர்வாகிகள் தளபதி செல்வம், பிரீஸ் பன்னீர், வெங்கல் கோவிந்த், ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் வில்சன், வல்லூர் சங்கர், ஞாயிறு ராஜேஷ், காட்டாவூர் சேட்டு, கும்மிடிப்பூண்டி ஆசாத், ஒன்றிய நிர்வாகிகள் விக்ரம், ஜெயசீலன், பரமானந்தம், புரட்சி பிரியன், சந்திப், கள்ளூர் ஜெகன், கௌதம், நகர நிர்வாகிகள் கோகுல், ஹரி, கலா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here