பொன்னேரி, நவ. 24 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர் பணிக்கு வாரிசுதாரர் உரிமை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்  உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வலியுறுத்தி  வருவாய் கிராம உதவியாளர்  சங்கம் சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் குணசேகர், இணை சுரேஷ்குமார், பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், வட்ட செய குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை கிராம நிர்வாக உதவிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here